tamilnadu

img

பன்முக கலாச்சாரத் தூதர்...

‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்து இரண்டு வாரங்களாகி விட்டன என்பதை ஏற்க மனது மறுக்கிறது. இன்றைய புதியதலைமுறைக்கு எஸ்.பி.பி., ஒரு நல்ல மூத்தபாடகர் என்பது மட்டுமே புரிதலாக இருக்கக் கூடும்;ஆனால், 75 - 80 களில் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எஸ்.பி.பி.-யின் பாடல்கள் உணர்வுகளில் ஏற் படுத்திய பரவச நிலையின் அனுபவமே தனி சுகம் தான்...!

‘பாட்டு ஒன்று பாடு தம்பி’ பாடலில் வேலையற்ற இளைஞர்கள் உணர்ச்சி மேலிட சுதந்திரஇந்தியாவின் அவலங்கள் மீதான விமர்சனத்தைகேலியும் கிண்டலும், நக்கலும் நையாண்டியுமானபாவனைகளுடன் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்.‘கூவுங்கள் சேவல்களே... செந்நிறக் கொண்டைகளே’ பாடல் வரியில் உள்ள செந்நிறக் கொண்டைகளே என்கிற இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் மிகுந்த அழுத்தம் கொடுத்திருப்பார்; இப்பாடலின் பல்லவியின் இறுதியில் வரும் ‘சூரியனை இங்கு (சேரிக்குள்) கொண்டு வர...இந்தக் கைகளுக்கு அந்த தெம்பு வர’ என்னும்வரிகளுக்கு வல்லின உச்சரிப்பு மிகும் வகையில்அழுத்தம் கொடுத்து பாடி உயிர் தந்திருப்பார்.‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலில் சமூக
முரண்களைச் சுட்டிக் காட்டும் வரிகளில் தொழிலாளிகளுக்கு கோபத்தை உற்சாகத்தின் வழியே கடத்தியிருப்பார்! ‘காந்தி தேசமே’ பாடலின் மூலம்சமூக அவலங்களையும் அதை மாற்ற வேண்டாமாஎன்கிற ஆவேசத் துடிப்பையும் கொண்டு வந்தி
ருப்பார். அதேபோல ‘ஏஞ்சோடி மஞ்சக்குருவி’ போன்ற களியாட்டம் போடும் பாடல்களென்றால் அது எஸ்.பி.பி.-க்கு பொருந்திப் போவது போலவேறு எந்தப் பாடகருக்கும் பொருந்திப் போனதுகிடையாது. இதுதான் விளிம்பு நிலை மக்களி
டம் அவருக்கு ஈடில்லா ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

சாஸ்திரீய (கர்நாடக) இசையை முறையாக பயிலாத ஒரு பாடகராக இருந்த போதும், நீடித்தப் புகழுடன் திரையுலகில் செல்வாக்கு செலுத்தியதன் மூலம் - சாஸ்திரீய இசையைப் பயின்றவர்கள் தான்திரையுலகில் செல்வாக்கும், புகழும் பெற முடியும்என திரையுலகில் நிலவிய நிலபிரபுத்துவத்தின் எச்சமாக மீந்த மரபை உடைத்தவர்!காதல், வெற்றி, களிப்பு, வீரம், கோபம், துன்பம், மகிழ்ச்சி, இரக்கம், எழுச்சி போன்ற பல விதமான உணர்ச்சிகளையும் எஸ்.பி.பி., வெளிப் படுத்தியிருந்தாலும் எல்லா உணர்ச்சி பாவங்களையும் தாண்டி அந்தக் குரலில் மேலோங்கி இருப்பதுஉற்சாகத்தையும், கொண்டாட்ட மனநிலையையும்உருவாக்கும் இளமையும், அழகும், குழைவும் இழைந்தோடும் சாரீரமாகும். அதுவே அவரது குரலானது சமூகத்தின் உயர்தட்டு வர்க்கம், நடுத்தர வர்க்கம், கீழ்நிலை வர்க்கம் என எல்லா தரப்பினரையும் ஈர்க்க கூடியதாகவும்; இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் இதயத்தை கவ்விப் பிடிக்கவும் காரணமாகஅமைந்தது.
உற்சாகமும், கொண்டாட்ட மனநிலையும் உழைக்கும் மக்களுக்குத் தேவையாய் இருக்கிறது. ஏனென்றால், ஏற்றத்தாழ்வு நிறைந்த வர்க்கசமுதாயத்தில் ‘மாற்றத்திற்கான தத்துவம்’ சாமானிய மக்களை சென்று சேரும் வரை வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தினாலும் குழப்பத்தினாலும் அலைக்கழிக்கப்படும் போது, உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது என்பதையும் இடர்நிறைந்த வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் அது தான் ஊக்க சக்தியாகத் திகழ்கிறது. அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கையின் மீதான ஈர்ப்பை 50 ஆண்டுகளாக புத்துயிர்ப்போடு அடைகாத்துத் தந்த மக்கள் கலைஞன் எஸ்.பி.பி., என்றால் அது மிகையல்ல...!

வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த எஸ்.பி.பி.-க்கு உந்து சக்தியாகத் திகழ்ந்த பழம்பெரும் இந்தி திரைப்பட பாடகர் முகம்மது ரஃபிக் ஒரு முஸ்லீம்; பாதபூஜை செய்து தனதுமானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட திரைப்படபாடகர் யேசுதாஸ் ஒரு கிறிஸ்தவர்; கலைஞர்கள்சாதி, மத, இன, மொழி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போதும், மேற்கண்ட மூவரின் மதம் சார்ந்த விசயம் ஒரு அற்புதமான செய்தியை இந்திய ரசிகப் பெருமக்களுக்கு உரக்கச் சொல்கிறது. நமது கனவுகளையும், கற்பனைகளையும் விட உண்மை எவ்வளவு இயல்பாகவும்; அற்புதமாகவும் அமைந்து விடுகிறது என்பது தான் அது.

வேறுபட்ட மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட 16 மாநில மொழிகளில் பாடியுள்ள எஸ்.பி.பி. தனது குரலின் மூலம் இந்த பன்முககலாச்சார உணர்வுகளுக்கு உயிர் கொடுத்துள் ளார்! மொத்தத்தில் திரையிசைப் பாடகர் என்னும்
தொழிற்முறைக் கலைஞராக இருந்த போதும் தன்னையும் அறியாமலே; இன்று வலிந்து திணிக்கப்படும் ஒற்றைக் கலாச்சாரத்திற்கு எதிராக பன்முக கலாச்சாரத் தூதுவனாக வலம் வந்துள்ளார் என்பது தான் எஸ்.பி.பாலசுப்பிரமணி
யம் எனும் அந்த கலைஞனை ஒரு மகத்தான கலைஞனாக காலம் நமக்கு அடையாளம் காட்டுகிறது!

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்